Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினுக்கு கண் பார்வை இல்லை!? – அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (15:22 IST)
குழந்தை சுஜித் மீட்பு சம்பவத்தில் அதிமுக சரியாக செயல்படவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு பதிலளித்துள்ளார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.

மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி கொண்ட குழந்தை சுஜித்தை மீட்க 4 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. ஆனாலும் குழந்தை சுஜித் இறந்த நிலையிலேயே மீட்கப்பட்டது பலருக்கு வேதனையை உண்டாக்கியது. சுஜித்தின் பெற்றோருக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் நிதியுதவி அளித்து ஆறுதல் சொன்னார்கள்.

இந்நிலையில் குழந்தை சுஜித் மீட்பு பணியில் அரசு சரியாக செயல்படவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ”குழந்தை சுஜித்தை காப்பாற்ற அரசு செய்த முயற்சிகள் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். குழந்தை மீட்பு சம்பவத்தில் அரசு செயல்பட்ட விதத்தை அனைவருமே பாராட்டி வரும் நிலையில், ஸ்டாலின் மட்டும் குறை கூறுகிறார் என்றால் அவர் கண்ணில் பார்வை இல்லை என்றுதான் கூறவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments