Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகாசி பட்டாசு விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம்! – முதல்வர் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (11:20 IST)
சிவகாசியில் நடந்த பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

சிவகாசியில் பாறைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 30 பேர் ஆலையில் பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தால் இரண்டு அறைகள் தரைமட்டமாகியுள்ளது.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் ரூ.500 கோடி செலவில் 10 மாடி பஸ் நிலையம்.. ஆந்திர அரசு அறிவிப்பு..!

2026 தேர்தலில் தனித்து போட்டி.. சீமான் அறிவிப்பு.. 4 அணிகள் போட்டியா?

மீண்டும் ரூ.70,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.280 உயர்வு..!

முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்.. அமெரிக்க மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments