Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகாசி பட்டாசு விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம்! – முதல்வர் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (11:20 IST)
சிவகாசியில் நடந்த பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

சிவகாசியில் பாறைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 30 பேர் ஆலையில் பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தால் இரண்டு அறைகள் தரைமட்டமாகியுள்ளது.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments