Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 லட்சம் விவசாயிகளுக்கு ஒரே நாளில் மின் இணைப்பு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (10:49 IST)
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்புகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் விவசாயிகள் 1 லட்சம் பேருக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என முன்னதாக திமுக அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அண்ணா நூலகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் தருவதற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர் “விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தில் 4.3 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் முதற்கட்டமாக 1 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. 4 மாதங்களுக்கு 1 லட்சம் இணைப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

அடுத்த கட்டுரையில்
Show comments