Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷனில் 2-வது தவணை நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

Webdunia
திங்கள், 31 மே 2021 (11:25 IST)
ரேஷனில் 2-வது தவணை கொரோனா நிவாரண நிதி வழங்குவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

 
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து இயங்கும் என தமிழக அரசு கூறியுள்ளது. 
 
மேலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் முதல் 13 வகையான இலவச மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதோடு கொரோனா நிவாரண நிதி பாக்கியான ரூ.2,000 ஜூன் 3 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், ரேஷனில் 2-வது தவணை கொரோனா நிவாரண நிதி வழங்குவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். 
 
இதனோடு ரேஷன் கடைகளில் 13 பொருட்களுடன் கூடிய மளிகை பொருள் வழங்குவது குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments