Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆட்சியை கலைக்க விரும்பும் ஸ்டாலின்? அதிமுக மீது அதிருப்தி

ஆட்சியை கலைக்க விரும்பும் ஸ்டாலின்? அதிமுக மீது அதிருப்தி
, வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (20:55 IST)
தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக எந்த பணிகளும் நடைப்பெறவில்லை, அரசு முற்றிலும் முடங்கியுள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநரிடம் கூறியுள்ளார். இத்தகைய தமிழக அரசியல் சூழலில் ஸ்டாலின் இதுபோன்று கூறியிருப்பது ஆட்சியை கலைக்க மறைமுகமாக கூறியது போன்று உள்ளது.  


 


திமுக செயல் தலைவர் தற்போது ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  

ஆளுநரிடம் தமிழக அரசின் செயல்பாடு குறித்து விவாதித்தேன். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின் அதிமுக கட்சியில் மல்லுக்கட்டு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக தமிழகத்தில் எந்த பணிகளும் நடைப்பெறவில்லை, அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளது.  

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு கூட அரசு ஒத்துழைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் உள்ளாட்சி தொடர்பான வழக்கில் கூறப்பட்டுள்ளது.

பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஜனநாயகப்படி விடுவிக்கப்படும் என்று கோரியுள்ளேன். சசிகலா அவர்கள் பற்றி பேசி என் நேரத்தை விணாக்க விரும்பவில்லை, என் தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை, என்றார்.

இதன்மூலம் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் அதிமுக ஆட்சி அதிருப்தியை தந்துள்ளது என்று கூறியுள்ளார். ஆளுநர் ஏற்கனவே யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்று குழப்பத்தில் உள்ள நிலையில் ஸ்டாலின் ஒட்டுமொத்தமாக அதிமுக மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

மேலும் அரசை கலைக்க வேண்டும் என்று மறைமுகமாக சுட்டிக்காட்டியது போல் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா பற்றி பேசினால் என் தரம் குறைந்துவிடும்: மு.க.ஸ்டாலின்