Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின்

ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின்
, செவ்வாய், 4 மே 2021 (16:21 IST)
நாளை மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களைச் சந்தித்து ஆட்சியமைக்க அமைக்க உரிமைகோருகிறார் மு.க. ஸ்டாலின்.

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே பலத்த போட்டிகள் காணப்பட்டது

இந்நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின்  கொளத்தூர் தொகுதியில் போட்யிட்டு 3 ஆம் முறை 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் நாளை மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களைச் சந்தித்து ஆட்சிமை அமைக்க உரிமைகோருகிறார் ஸ்டாலின்.

மேலும், தங்கள் எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க அமைக்க ஸ்டாலின் உரிமை கோருகிறார்.

வரும் மே 7 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளதால், நாளை ஆளுநரை ஸ்டாலின் சந்திக்க உள்ளதாலும்  திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமாவா…அரசியலா?? உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ் !