Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சநீதிமன்றத்திற்கு சென்னையில் கிளை! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (12:41 IST)
சென்னையில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில், சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கும் கோரிக்கையை முதல்வர் விடுத்துள்ளார்.

மாநில நீதிமன்றங்களுக்கு மேலாக உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு செல்லும் நிலையில் இதற்காக டெல்லி செல்வது அவசியமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்திற்கான கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “உச்சநீதிமன்றத்துக்கான கிளை நீதிமன்றம் சென்னையில் அமைக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தமிழ் மொழி வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி ஆட்சி என அமித்ஷா இனிமேல் சொன்னால் ஈபிஎஸ் முடிவு எப்படி இருக்கும்? பரபரப்பு தகவல்..!

யாருமே வழங்காத சலுகை.. ஒரு மாத ரீசார்ஜ் இவ்வளவு தான்.. பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு..!

குலசாமின்னு சொல்லி குத்திவிட்டார்கள்! அன்புமணியை விரட்டிவிட நான் என்ன முட்டாளா? - ராமதாஸ் வேதனை!

ஓ நண்பனே.. எலான் மஸ்க் மன்னிப்பை ஏற்ற ட்ரம்ப்! மீண்டும் இணைந்த கைகள்?

விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? டாக்டர் ராமதாஸ் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments