Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சநீதிமன்றத்திற்கு சென்னையில் கிளை! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (12:41 IST)
சென்னையில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில், சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கும் கோரிக்கையை முதல்வர் விடுத்துள்ளார்.

மாநில நீதிமன்றங்களுக்கு மேலாக உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு செல்லும் நிலையில் இதற்காக டெல்லி செல்வது அவசியமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்திற்கான கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “உச்சநீதிமன்றத்துக்கான கிளை நீதிமன்றம் சென்னையில் அமைக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தமிழ் மொழி வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments