Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனியாவது அலட்சியம் காட்டாமல் செயல்படுங்கள் – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

இனியாவது அலட்சியம் காட்டாமல் செயல்படுங்கள் – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை!
, திங்கள், 20 ஏப்ரல் 2020 (09:08 IST)
தமிழகத்தில் கொரோனா தொற்றால் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அரசு அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பலி எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நரம்பியல் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”தமிழகத்தில் மேலும் ஒரு மருத்துவர் கொரோனாவால் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலனுக்காக பணியாற்றும் காவலர்கள், மருத்துவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது அரசு சரியாக செயல்படவில்லை என்பதை காட்டுகிறது. தமிழக அரசு கொரோனா நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்துக்கு கூடுதல் ரேபிட் டெஸ்ட் கிட்கள் ! பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்!