Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊராட்சிக்கு அளிக்க வேண்டிய நிதியை டெண்டர் விடுவது நியாயமா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (09:30 IST)
குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்கு டெண்டர் முறையை அமல்படுத்துவதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் மூலம் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக தமிழகத்திற்கு 2 ஆயிரத்து 264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஊராட்சிகள் வாரியாக டெண்டர்கள் விடுவதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் “அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்காமல் டெண்டர் முறையை பின்பற்றுவது உள்ளாட்சி அமைப்புகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகும். இந்த திட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலர்கள் ஒத்துப்போவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியை மாவட்ட வாரியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்து அளிக்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments