ஊராட்சிக்கு அளிக்க வேண்டிய நிதியை டெண்டர் விடுவது நியாயமா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (09:30 IST)
குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்கு டெண்டர் முறையை அமல்படுத்துவதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் மூலம் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக தமிழகத்திற்கு 2 ஆயிரத்து 264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஊராட்சிகள் வாரியாக டெண்டர்கள் விடுவதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் “அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்காமல் டெண்டர் முறையை பின்பற்றுவது உள்ளாட்சி அமைப்புகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகும். இந்த திட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலர்கள் ஒத்துப்போவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியை மாவட்ட வாரியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்து அளிக்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேத்து முளைச்ச காளான்லாம்!.. விஜயை சொல்கிறாரா பிரேமலதா?!...

அட இதுக்கே நாக்கு தள்ளுதப்பா? திரையுலகிலும் தேர்தலை சந்திக்கும் விஜய்..

ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்திய நிறுவனத்திற்கு தடை: அமெரிக்கா அதிரடி..!

சென்னையில் நடந்த அமலாக்கத்துறை சோதனை.. கைப்பற்றப்பட்ட பணம், நகை எவ்வளவு?

2 நாட்கள் உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments