Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் உரிமையை பிடுங்கி எறிவதா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (11:48 IST)
காவிரி மேலாண்மை ஆணையத்தை நீர்வளத்துறையின் கீழ் கொண்டு வந்ததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள நீர்நிலைகளை மேலாண்மை செய்யும் அடிப்படையில் மத்திய அரசு நீர்வளத்துறை திருத்த விதிகளை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி மாநில வாரியான மேலாண்மை ஆணையங்கள் நீர்வளத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதன் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு ஆணையங்கள் செயல்பட வேண்டியிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் இந்த திருத்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”காவிரி மேலாண்மை வாரியத்தை நீர்வளத்துறையின் கீழ் கொண்டு வருவது தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் செயல். காவிரி நதிநீர் உரிமை பறிபோவதை இனிமேலும் தமிழகம் பொறுத்துக் கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments