ஆதாரம் இருந்தால் சொல்லுங்க... செல்லூராருக்கு செக் வைத்த ஸ்டாலின்!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (11:34 IST)
மதுரையில் பென்னி குவிக் இல்லத்தை இடித்து விட்டு கருணாநிதி நூலகம் கட்டப்படவில்லை முக ஸ்டாலின் தகவல். 
 
மதுரை மாவட்டம் நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் `கலைஞர் நினைவு நூலகம்' ஒன்றைக் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சுமார் 70 கோடி மதிப்பில் 2 ஏக்கர் பரப்பளவில் இந்த நூலகம் அமைய உள்ளது. 
 
இந்நிலையில், மதுரையில் உள்ள பென்னி குவிக் இல்லத்தை அகற்றி கலைஞர் நூலகம் கட்டப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டிய நிலையில் இதற்கு முதல்வர் முக ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, மதுரையில் பென்னி குவிக் இல்லத்தை இடித்து விட்டு கருணாநிதி நூலகம் கட்டப்படவில்லை. ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்று செல்லூர் ராஜுவிற்கு பதிலடி கொடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் எங்க வீட்டுப்பிள்ளை.. கோத்துவிடாதீங்க!... பிரேமலதா விளக்கம்!..

18 மாதங்களாக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 கப்பல் தள ஊழியர்கள் கைது.. அதிர்ச்சி தகவல்..!

ஒரே ஒரு வீட்டை தவிர எனது வருமானம் முழுவதையும் கட்சிக்கு தருவேன்: பிரசாந்த் கிஷோர்

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம்: பிரேமலதா விஜயகாந்த்..!

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments