Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவ்வளவு குளறுபடிகளைதான் தாங்குவது? – அதிமுக மீது ஸ்டாலின் ஆவேசம்!

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (11:39 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளால் ஏற்பட்ட மரணங்களில் தமிழக அரசு குளறுபடிகள் செய்வதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இரண்டு லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் 3,409 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏற்படும் கொரோனா இறப்புகளில் எண்ணிக்கையை குறைத்து வெளியிடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”சென்னையிலேயே 63% மரணங்களை மறைத்து மோசடி என்றால் கட்டமைப்பு வசதிகளற்ற மாவட்டங்களில் மறைக்கப்பட்ட மரணங்கள் எத்தனை? மரணங்களின் தணிக்கைக்காக 39 கமிட்டிகளை அமைக்க ஏப்ரல் 20ல் அரசாணை வெளியிட்டு இப்பொழுது மீண்டும் கமிட்டிக்கான அறிவிப்பு ஏன்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் “தன் நிர்வாக தவறுகளால் இலட்சக்கணக்கான உயிர்களுடன் அதிமுக அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை குளறுபடிகளைதான் தமிழகம் தாங்கும்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments