Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாடியுடன் ஆள் அடையாளமின்றி மாறிப்போன முகிலன் - ஆவேச முழக்கமிட்ட வைரல் வீடியோ!

தாடியுடன் ஆள் அடையாளமின்றி  மாறிப்போன முகிலன் - ஆவேச முழக்கமிட்ட வைரல் வீடியோ!
, ஞாயிறு, 7 ஜூலை 2019 (07:46 IST)
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவா்கள் மீது காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடா்பாக சமூக செயல்பாட்டாளா் முகிலன் ஆவணப்படம் வெளியிட்டார். இந்த சம்பவத்தை அடுத்து அவரை காணவில்லை. அவா் கடத்தப்பட்டிருக்கலாம் என்று பல்வேறு பகுதிகளிலும் உறவினா்கள், நண்பா்கள் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் அவரை தேடி வந்தனர். 


 
ஆனால் முகிலின் முகவரி இன்றி துலைந்துவிட்டார். இதனால் மதுரையைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர் ஹென்றி டிஃபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முகிலனை தமிழக காவல்துறை கண்டறியவேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். பின்னர் காணாமல் போனதாக கூறப்பட்டுவந்த முகிலனை கண்டுபிடிப்பது தொடா்பான வழக்கை  சிபிசிஐடி காவல் துறையினா் விசாரித்து வந்தனர். 
 
இந்த நிலையில் காணாமல் போனதாக போலீசாரால் தேடப்பட்டு வந்த முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவரது நண்பர் சண்முகம், முகிலனின் மனைவியிடம் தெரிவித்ததையடுத்து திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை ஆந்திர காவல்துறையினர் கொண்டுசெல்லும் காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
தாடியுடன் ஆல் அடையாளம் இன்றி முற்றிலும் மாறுபட்டுள்ள முகிலனை  ஆந்திர காவல் துறையினர் திருப்பதி ரயில்நிலையத்தில் இருந்து கொண்டுசெல்லப்படுவது போன்ற இந்த காணொளியில், முகிலன் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்புகிறார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகிலன் உயிருடன் இருக்கிறார் : நேரில் பார்த்ததாக நண்பர் தகவல்