Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிரண்ட ரேக்ளா மாடு....சாலையில் கணவன் கண்முன்னே மனைவி பலி

Webdunia
திங்கள், 22 மே 2023 (23:05 IST)
கோவை மாவட்டம் வண்டிக்காரனூர் பிரிவு அருகே நடைபெற்ற சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டமுத்தூர் குப்பேபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் பிரகாஷ்(32). இவரது மனைவி புவனேஷ்வரி(25). இவர்கள் நேற்று மாலை வண்டிக்காரனூர் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, இவர்களுக்கு முன் சென்ற ரேக்ளா வண்டி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.  மாடு திடீரென்று மிரண்டு எதிர்சாலைக்குத் திரும்பியதால், பின்னால் வந்த பிரகாஷின் வாகனம் மாட்டு வண்டியின் மீது மோதியது.

இதில், பிரகாஷும் அவரது மனைவியும்  தடுமாறி கீழே விழுந்தனர். புவனேஷ்வரிக்குத் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு வந்து புவனேஷ்வரின்  உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்.. பெரம்பலூர் மக்களுக்கு விஜய் கொடுத்த உறுதிமொழி..!

விஜய் குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

நீட் விலக்கு வாக்குறுதியை இப்போதைக்கு நிறைவேற்ற முடியவில்லை: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் ரேபிஸ் நோய் தாக்கி ஒருவர் உயிரிழப்பு: நாய் ஆர்வலர்களால் இன்னும் எத்தனை பலி?

மீன்பிடிக்க சென்ற இளைஞரை கடித்துக் குதறிய முதலை! - திருவண்ணாமலையில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments