Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிரண்ட ரேக்ளா மாடு....சாலையில் கணவன் கண்முன்னே மனைவி பலி

Webdunia
திங்கள், 22 மே 2023 (23:05 IST)
கோவை மாவட்டம் வண்டிக்காரனூர் பிரிவு அருகே நடைபெற்ற சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டமுத்தூர் குப்பேபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் பிரகாஷ்(32). இவரது மனைவி புவனேஷ்வரி(25). இவர்கள் நேற்று மாலை வண்டிக்காரனூர் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, இவர்களுக்கு முன் சென்ற ரேக்ளா வண்டி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.  மாடு திடீரென்று மிரண்டு எதிர்சாலைக்குத் திரும்பியதால், பின்னால் வந்த பிரகாஷின் வாகனம் மாட்டு வண்டியின் மீது மோதியது.

இதில், பிரகாஷும் அவரது மனைவியும்  தடுமாறி கீழே விழுந்தனர். புவனேஷ்வரிக்குத் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு வந்து புவனேஷ்வரின்  உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments