Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் அமைச்சர் காமராஜ்: விஜயபாஸ்கர் தகவல்

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (07:44 IST)
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜ் தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் காமராஜ் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் என்பதும் அவரது சிகிச்சை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்தனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் நேற்று இரவு எம்.ஜி.எம் மருத்துவமனை அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அமைச்சர் காமராஜ் உடல் நலம் தேறி வருவதாகவும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறும்போது சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் காமராஜ் அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்றும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments