Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர்நீதிமன்ற மதுரை கிளை குறித்த சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (12:31 IST)
மதுரை உயர்நீதிமன்ற கிளை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 
 
நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அப்படி ஒரு வார்த்தை பயன்படுத்தியது எனக்கு காலையில் தான் தெரியவந்தது என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இதற்காக தான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
மதுரை உயர்நீதிமன்ற கிளை கலைஞர் கொடுத்த கொடை என்பதற்கு பதிலாக தவறான வார்த்தை பயன்படுத்தி விட்டேன் என்றும் அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். 
 
அமைச்சர் எ.வ.வேலு கூறிய சர்ச்சை கருத்து குறித்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்: நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தீர்மானம்!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே: அன்புமணி கண்டனம்..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments