Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி! என்ன காரணம்?

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (11:17 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி சந்தித்து நீட் தேர்வு குறித்து ஆலோசனை செய்ததாக தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில் நாளை மீண்டும் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 
 
இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் உதயநிதி  தலைமையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கேலோ இந்தியா விளையாட்டுக்கான அழைப்புகளை வழங்குவதற்காக பிரதமர் மோடியை நாளை அமைச்சர் உதயநிதி சந்திக்க இருக்கிறார். 
 
இதற்காக அவர் இன்று டெல்லி பயணம் செய்வதாகவும் நாளை பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments