Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கியதில் திடீர் சர்ச்சை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிரடி பேட்டி

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (22:13 IST)
திமுக தலைவர் கருணாநிதி மறைந்தபோது அவருக்கு நினைவிடம் அமைக்க திமுக தரப்பில் இருந்து மு.க.ஸ்டாலினே நேரடியாக முதல்வரை சந்தித்து மெரீனாவில் இடம் ஒதுக்கி தருமாறு கேட்டார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கருணாநிதிக்கு இடம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனையடுத்து திமுக நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் மெரீனாவில் கருணாநிதியின் சமாதி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கப்பட்ட கோப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் கையெழுத்திடவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். மேலும் நானும், அமைச்சர் கடம்பூர் ராஜூவும் மட்டும்தான் கையெழுத்து போட்டுள்ளதாகவும், முதல்வர் கையெழுத்திட்டால் மட்டுமே அந்த கோப்பு இறுதி வடிவம் பெறும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இதனால் மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கியதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் எப்போது வேண்டுமானாலும் சுப்ரீம் கோர்ட்டை அணுக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments