Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி

Sinoj
வெள்ளி, 12 ஜனவரி 2024 (20:50 IST)
சென்னை தீவுத்திடலில், இன்று, தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 48 ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 48 ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை சென்னை தீவுத்திடலில் இன்று தொடங்கி வைத்தோம். 
 
ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின் போதும் தீவுத்திடலே மக்கள் கடலாகிற வகையில்,  நடைபெற்று வரும் இந்த பொருட்காட்சியின் சிறப்பை எடுத்துரைத்து உரையாற்றினோம். 
 
மேலும், அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டு, சிறப்பான முறையில் அரங்குகளை அமைத்திருந்த,  சிறைத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினோம். 
 
தமிழக சுற்றுலாத்துறை-ன் 48 ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி புது அனுபவமாக அமைய வாழ்த்துகள்''என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

துணை முதலமைச்சர் பதவி! ஆசைக்காட்டினால் சென்று விடுவேனா? - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments