Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த பக்கம் போலீஸ் புடிக்கிறாங்க! கூகிள் மேப்பில் குறித்து வைத்த இளைஞர்! - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சொன்ன யோசனை!

Prasanth Karthick
செவ்வாய், 23 ஜூலை 2024 (10:28 IST)

சென்னையில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனை செய்யும் பகுதியை இளைஞர் ஒருவர் கூகிள் மேப்பில் குறித்து வைத்த சம்பவம் வைரலாகியுள்ளது.

 

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் அதேசமயம் விபத்துகளால் உயிரிழப்பு சம்பவங்களும் தொடர்கதையாகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

சமீப காலமாக போக்குவரத்து காவலர்கள் சென்னையின் பல பகுதிகளில் சோதனை செய்து ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இவ்வாறான சமயங்களில் சில வாகன ஓட்டிகள் எதிரே செல்லும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அந்த பக்கம் போலீஸ் சோதனை நடப்பதை சங்கேத குறியீடுகளால் உணர்த்தும் சேவையை பல காலமாக செய்து வருகின்றனர்.
 

ALSO READ: மழை குறைந்தது! தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பையும் குறைத்த கர்நாடகா! - தண்ணீர் வரத்து நிலவரம்!
 

அதில் ஒரு இளைஞர் ஒரு படி முன்னே சென்று, போலீஸ் செக்கிங் உள்ள இடத்தை கூகிள் மேப்பிலேயே குறித்து ‘போலீஸ் இருப்பாங்க.. ஹெல்மெட் போடுங்க’ என டேக் செய்துள்ளார். அந்த வழியாக கூகிள் மேப் பார்த்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இந்த அறிவிப்பு காட்டும் என்பதால் அவர்கள் உடனடியாக ஹெல்மெட் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

 

இந்த கூகிள் மேப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதை தனது எக்ஸ் தளத்தில் ஷேர் செய்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, இதை போன்று போக்குவரத்து காவலர்கள் எந்தெந்த இடங்களில் செக்கிங் உள்ளது என்பதை கூகிள் மேப்பிலேயே குறித்து வைத்துவிட்டால் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வார்கள். ஹெல்மெட் அணியுங்கள் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

குளிர்பானத்தில் மது கலந்துக் கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு: உறவினர் போல நாடகமாடிய கணவன்,மனைவி கைது....

சந்திரயான் - 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை.!!

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவில் அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில்அளிக்காமல்சிரித்தபடி சென்ற சவுமியா அன்புமணி!

யாரைத் துணை முதல்வராக அமர வைப்பது என்பது குறித்து ஆளுங்கட்சி எடுக்கின்ற முடிவு- தொல்.திருமாவளவன்!...

அடுத்த கட்டுரையில்
Show comments