Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக மீதான கண் திருஷ்டியே முக்கொம்பு அணை உடையக் காரணம் - அதிமுக அமைச்சரின் புதிய கண்டுபிடிப்பு

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (08:07 IST)
கண் திருஷ்டியாலதான் முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்தது என அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியது கேலிக்கு ஆளாகியுள்ளது.
பொது இடங்களில் எப்படி பேசுவது என்று தெரியாமல் காமெடியாக பேசி தொடர்ந்து கேலிக்கு ஆளாகுவது அதிமுக அமைச்சர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இதில் முதலமைச்சர் எடப்பாடியாரும் அடங்குவார்.
 
சமீபத்தில் திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு, பருவமாற்றத்திற்கு மனிதர்களுக்கு காய்ச்சல் ஏற்படுவது போல வெள்ளப்பெருக்கால் அணைக்கு காய்ச்சல் ஏற்பட்டு அதன் மதகுகள் உடைந்துவிட்டது என கூறினார். அணை உடைந்ததற்கு அற்புதமான விளக்கத்தை அளித்த எடப்பாடி பழனிசாமிக்கு ‘டாக்டர் பட்டம்’ தான் வழங்க வேண்டும் என எடப்பாடியாரை பலர் விமர்சனம் செய்தனர். 
இதற்கு அடுத்தபடியாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூட்டம் ஒன்றில் பேசியபோது எடப்பாடி பழனிசாமி அரசு மீது பட்ட கண் திருஷ்டியால் தான் முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்துவிட்டது என கூறினார். இவரது கண்டுபிடிப்பை பலர் கிண்டலடித்து வருகின்றனர்.
 
சைண்டிஸ்ட் செல்லூர் ராஜூ அண்ணனையே நீங்க மீறிட்டீங்கன்னேன்னு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments