Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! – மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (12:45 IST)
அதிமுக அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு ஏற்கனவே கொரோனா உறுதியான நிலையில் தற்போது மின்சார துறை அமைச்சருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிமுக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ஐந்து பேருக்கும், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் தற்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொற்று உறுதியாகும் முன்னர் வரை, அதாவது நேற்று முன் தினம் வரை அதிமுக கட்சி சார்ந்த கூட்டங்கள், நாமக்கலில் நடந்த நிவாரண பொருட்கள் வழங்கும் கூட்டம் உள்ளிட்டவற்றில் அமைச்சர் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பிற அமைச்சர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments