Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆவின் மோர்! – 5 புதிய பால் பொருட்களை அறிமுகப்படுத்திய முதல்வர்!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (12:28 IST)
தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்தின் புதிய 5 பால் பொருட்களை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி வைத்தார்.

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் பால் பாக்கெட்டுகள், தயிர், வெண்ணெய், நெய் மற்றும் பாலாடை கட்டி உள்ளிட்ட பல்வேறு பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது.

தற்போது புதிதாக ஐந்து பால் பொருட்களை ஆவின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தியுள்ளார். இஞ்சி, எழுமிச்சை, கடுகு, சீரகம், மிளகு, துளசி, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகிய நோய் எதிர்ப்பு சக்திகளை அளிக்கக்கூடிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆவின் மோர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆவின் சாக்கலேட் லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் ஆவின் டீ மேட் பால் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இவை அன்றாட கடைகள் மற்றும் தமிழகம் முழுவதிலும் உள்ள ஆவின் விற்பனையகங்கள் அனைத்திலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments