Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலையே நீட் வேண்டாம் என சொன்னவர் தான்... மா.சுப்பிரமணியன் பேட்டி!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (11:05 IST)
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு அவசியமில்லை என சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை கூறியிருந்தார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

 
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுனர் ஆர்.என்.ரவி அதை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
அதை தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா நேற்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நேற்றே ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது குறித்து தெரிவித்ததாவது, 
நீட் தேர்வுக்கு பாஜக போட்ட முடிச்சை அவர்களே அவிழ்ப்பார்கள். நீட் தேர்வு அவசியமில்லை என்று சொன்னவர் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு அவசியமில்லை என சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை கூறியிருந்தார் என்பதை மறந்துவிட முடியாது. 
 
மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கல்வி திறன் அதிகம் உள்ளது என சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பேட்டியளித்திருந்தார். மாணவர்களுக்கு கல்வி திறன் அதிகமாக உள்ளதால் நீட் தேர்வை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கவும் அண்ணாமலை கோரியிருந்தார் என்பதையும் சுட்டி காட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments