Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 1,500 பேர் பாதிக்கப்படலாம்: அமைச்சர் தகவல்

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (11:30 IST)
தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களில் டெங்கு காய்ச்சல் காரணமாக1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு என  அமைச்சர் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:
 
உலக விபத்து தினத்தை முன்னிட்டு சென்னை சட்டக்கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு அக்.11 முதல் 31-ம் தேதி வரை மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.
 
தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 5,356 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் 531 பேர் உள்ளனர். 5 பேர்உயிரிழந்துள்ளனர். வரும் நவம்பர், டிசம்பரில் 1,000 முதல் 1,500 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தால், விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் சரிபாதியாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments