Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் மின் தேவை - அமைச்சர் நாளை ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (10:43 IST)
மின் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை ஆலோசனை. 

 
தமிழகத்தில் தற்போது மின் தேவை அதிகரித்துள்ளது என்றும் கடந்த காலங்களைவிட 2500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் தமிழகத்திற்கு தேவை உள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மின் தேவை அதிகரித்துள்ளதால் தான் அவ்வப்போது தமிழகத்தில் மின்தடை ஏற்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
மேலும் நாளொன்றுக்கு 8,800 டன் நிலக்கரி தேவைப்படுகிறது என்றும் மின் தேவை அதிகரித்துள்ளதால் உற்பத்தி திறனை அதிகரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னதாக தெரிவித்தார். 
 
இந்நிலையில் மின் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். அதோடு, விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டம், தொழில் நிறுவனங்களுக்கான மின்சார வசதி குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments