Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மின் தடையை தவிர்க்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

Webdunia
புதன், 17 மே 2023 (15:50 IST)
கோடை காலம் என்றாலே மின் வெட்டும் சேர்ந்து வரும் என்பதை அடுத்து சென்னை உள்பட பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பதிவு செய்து வருகின்றனர். 
 
குறிப்பாக சென்னையின் பல இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து பேட்டி அளித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சென்னையில் மின் நுகர்வு அதிகம் உள்ள இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு மின்விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
மேலும் கடந்த இரண்டு நாட்களில் 4016 மெகாவாட் ஆக மின் நுகர்வு அதிகரித்துள்ளது என்றும், 45 நாட்களில் 19,387 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது என்றும், மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments