Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? செங்கோட்டையன் பதில் !

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? செங்கோட்டையன் பதில் !
, வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (09:43 IST)
10 ஆம் வகுப்பு தேர்வு எப்போது என அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். 

 
தமிழகத்தில் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு இப்போது 10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான பொதுத் தேர்வு மே 3 ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலமும் மே மாதத்தோடு முடிய உள்ள நிலையில் மே மாதம் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது ஏப்ரல் மாதமே நடக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே 10 ஆம் வகுப்பு தேர்வு எப்போது என அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். 
 
தமிழகத்தில் மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைபாடு இல்லை. பிளஸ்-2 தேர்வில் எத்தனை பேர் தேர்வு எழுதுகின்றனர் என்பது அறிவிக்கப்படும். ஒரு அறைக்கு 25 பேர் இருக்கலாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
 
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. எப்போதும் அரசு பள்ளிக்கூடங்களுக்கு 98 சதவீதம் மாணவர்கள் மட்டுமே வருகின்றனர். இடைநிற்றல் என்பதே தமிழகத்தில் இல்லை. மாணவர்கள் சேர்க்கை கூடுதலாக உள்ளது என தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரும்பான்மையை நிரூபிக்க தமிழிசை உத்தரவு: என்ன செய்ய போகிறார் நாராயணசாமி?