Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கல்வி கொள்கை.. 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வா? – அமைச்சர் பதில்!

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (12:58 IST)
புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ள நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

மத்திய அரசின் புதிக கல்விக் கொள்கை திட்டம் தமிழகத்தில் ஏகப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது, தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என முதல்வர் கூறியுள்ளார். இதற்கு பலர் நன்றி தெரிவித்துள்ள நிலையில் மொத்தமாகவே புதிய கல்விக் கொள்கையை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மும்மொழி கொள்கை மட்டுமே தமிழக அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ளது போல தமிழகத்திலும் 3,5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது. தற்போதைய நிலையே தொடரும் என விளக்கமளித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஆய்வு செய்ய தமிழகத்தில் கல்வியாளர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  கல்வி குழுவின் ஆலோசனைக்கு பிறகே புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுமாதிரி மறுபடியும் செய்யனும்ன்னு கனவில் கூட நினைக்க கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து ரஜினி..!

சென்னைக்குள் இந்த 3 பேரும் நுழையக்கூடாது: காவல் ஆணையா் அருண் அதிரடி உத்தரவு..!

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments