Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளிகளில் அட்மிசன் ஆரம்பம்! – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (14:54 IST)
தமிழக பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்குமான தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் அட்மிசன் தொடங்கப்படும் தேதி குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் 1 முதல் 9 வரையில் உள்ள தமிழக அரசு பாடத்திட்டத்திலான பள்ளி மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நடந்து முடிந்த தேர்வுகளின் முடிவுகள் வெளியாகிய நிலையில் தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் ரிசல்ட் வந்துவிட்ட நிலையில் அட்மிசன் பணிகள் குறித்த முக்கிய அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி அரசுப் பள்ளிகளில் வரும் ஆகஸ்டு 17 முதல் 1,6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான சேர்க்கை தொடங்குகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 11ம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை ஆகஸ்டு 24ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments