வெங்காயம் பதுக்கினால் கடுமையான தண்டனை: செல்லூர் ராஜு எச்சரிக்கை

Webdunia
திங்கள், 25 நவம்பர் 2019 (16:55 IST)
வெங்காய விலை அதிகரித்து வரும் சூழலில் யாராவது வெங்காயத்தை பதுக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையிப்னால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் நாடெங்கிலும் வெங்காய தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கூடவே வெங்காய விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. சில மாநில அரசுகள் அங்காடிகள் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்து வருகின்றனர்.

தமிழகத்திலும் வெங்காய விலை உயர்வு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல வணிகர்கள் வெங்காயத்தை பதுக்கி வைத்திருந்து விலையேற்றத்தின் போது விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜு தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனை கடைகள் 50 டன்னுக்கும் அதிகமாக வைத்துக் கொள்ள கூடாதென்றும், அதற்கு அதிகமாக வைத்திருந்தாலோ, பதுக்கு வைத்திருந்து பிடிபட்டாலோ கடுமையான தண்டனைகள் வழங்கப்படுமென அவர் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments