Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை என்பது தவறு: அமைச்சர் சேகர்பாபு

Mahendran
வியாழன், 25 ஜனவரி 2024 (10:14 IST)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சொல்வது தவறு என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’பொங்கல் முடிந்தவுடன் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறி இருந்தனர். 
 
கோயம்பேடு பகுதியில் ஆயிரம் பேருந்துகளை நிறுத்துவதற்கு வசதி இல்லை. ஆனாலும் நாங்கள் கோயம்பேட்டிலிருந்து தான் இயக்குவோம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறினால் என்ன அர்த்தம். 
 
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை என அவர்கள் கூறுவது தவறு. ஆம்னி பேருந்துகளுக்காக ஐந்து நடை மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 77 பேருந்துகளை நிறுத்த முடியும். 
 
கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் உள்ளது. எனவே கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் திட்டமிட்டபடி இயக்கப்படும் என்று அவர் உறுதியாக கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments