Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்கனவே இருக்கும் அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுவார்களா? அமைச்சர் சேகர்பாபு தகவல்

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (09:40 IST)
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 58 புதிய அர்ச்சகர்களை நியமனம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏற்கனவே இருக்கும் அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுவார்களா என்ற கேள்விக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் 
 
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் யாரும் உயர் நிலைக்கு வரக் கூடாது என சிலர் விஷமத்தனமாக செயல்படுகின்றனர் என்றும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் 58 பேர் பணி நியமனம் செய்யப்பட்டது குறித்து சிலர் தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள் என்றும் கூறினார் 
 
கோயில்களில் ஏற்கனவே பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் யாரையும் வெளியேற்றும் திட்டம் இல்லை என்றும் இது குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர்களும் ஏற்கனவே பணியில் உள்ள அர்ச்சகரும் செயல்படுவார்கள் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments