Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வர மின்னணு விசா! – மத்திய அரசு நடவடிக்கை!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (09:39 IST)
ஆப்கானிஸ்தானிலிருந்து மக்கள் அவசரமாக வெளியேறி வரும் நிலையில் மின்னணு விசா முறையை இந்திய அரசு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நாட்டை கைப்பற்றிவிட்ட நிலையில் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானிலுள்ள தங்கள் நாட்டு மக்களை திரும்ப அழைத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவும் முன்னதாக 129 பேரை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்ட நிலையில், இன்று 120 பேரை மீட்க சிறப்பு விமானத்தை ஆப்கானிஸ்தான் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வரும் இந்தியர்கள் எளிதில் விசா பெற மின்னணு விசா முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. தலீபான்கள் ஆக்கிரமிப்பை தொடர்ந்து பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது தூதரகங்களை காலி செய்து வரும் நிலையில் இந்தியாவும் தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments