Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு பட்டா!? – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

கோவில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு பட்டா!? – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!
, திங்கள், 21 ஜூன் 2021 (16:54 IST)
தமிழகத்தில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு நாளடைவில் பட்டா வழங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அலுவலக விவரங்கள், சொத்து மற்றும் நில விவரங்களை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஆன்லைனில் பதிவேற்ற சமீபத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டிருந்தார். அதன்படி கோவில் விவரங்கள் அனைத்தும் மெல்ல ஆன்லைனில் பதிவேற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருப்போர் குறித்து பேசியுள்ள அமைச்சர் சேகர் பாபு “கோயில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளியவர்களை அறநிலையத்துறை சட்டப்படி முதலில் வாடகைதாரர்கள் ஆக மாற்றி, பின்னர் காலப்போக்கில் பட்டா வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

15 நாளில் ரேசன் கார்டு... மக்கள் மகிழ்ச்சி