Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா முடியட்டும்.. 7 நாளும் கோவில் திறக்கப்படும்! – அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (12:00 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக வார இறுதிகளில் கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில் விரைவில் முழுமையாக திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காராணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கோவில்கள் திறக்கப்பட்டிருந்தாலும் வார இறுதிகளான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மூடப்பட்டுள்ளது. மேலும் திருவிழாக்களும் நடத்த தடை உள்ளது. இதனால் மக்கள் பலர் கோவில்களை முழுமையாக திறக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் சேகர் பாபு “ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் பேரில்தான் கோவில்கள் 3 நாட்களுக்கு மூடப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா குறைந்தவுடன் வாரத்தின் 7 நாட்களிலும் கோவில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்பூர் வன்முறைக்கு காரணமான முக்கிய குற்றவாளியின் வீடு இடிப்பு: பெரும் பரபரப்பு..!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமரை சந்திக்கும் தமிழக எம்பிக்கள் குழு..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பெண் குழந்தை பிறந்தால் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்த வேண்டும்: கலெக்டர் உத்தரவு..!

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments