Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம்: அமைச்சர் ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை!

வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம்: அமைச்சர் ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை!
, செவ்வாய், 24 நவம்பர் 2020 (09:11 IST)
வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி விட்டது என்பதும் அந்த புயல் தமிழகத்தை நோக்கி வந்து  கொண்டிருப்பதை சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் உறுதி செய்தது
 
இதனை அடுத்து சென்னையில் காற்றுடன் கூடிய பலத்த மழை தற்போது பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நிவர் புயல் கரையை கடந்து விட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வீட்டை விட்டு மக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் அதே நேரத்தில் புயல் குறித்து பதற்றமடைய வேண்டாம் என்றும் எச்சரிக்கையுடன் பொதுமக்கள் இருக்க வேண்டுமென்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளார் 
 
மேலும் 36 வருவாய் மாவட்டங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என்றும் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளார். இவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நிவாரண படையினர் மற்றும் பேரிடர் படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக படுதோல்வியை சந்திக்கும்; சாரிப்பா.. ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன்! – அசடு வழிந்த தங்க தமிழ்செல்வன்!