Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீங்க கிங் ஆக இருங்க.. ஆனா கூட்டணியில இருங்க! – நினைவூட்டும் உதயகுமார்!

நீங்க கிங் ஆக இருங்க.. ஆனா கூட்டணியில இருங்க! – நினைவூட்டும் உதயகுமார்!
, புதன், 26 ஆகஸ்ட் 2020 (11:05 IST)
தேமுதிக தனித்து நிற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் “கேப்டன் விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டுமென தொண்டர்கள் விரும்புகிறார்கள், தேமுதிக சட்டமன்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ள வேண்டுமென தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விரும்புகிறார்கள்” என கூறியிருந்தார். முன்னதாக மாநிலங்களவையில் தேமுதிகவிற்கு சீட் வழங்காததால் தேமுதிக தனித்து தேர்தலை சந்திக்கு முடிவில் உள்ளதோ என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.

பிரேமலதா விஜயகாந்தின் இந்த கருத்தை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் விஜயகாந்திற்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இதனால் தேமுதிகவின் கூட்டணி திசை திரும்புமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் “தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டுமென விரும்புவது அக்கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் உரிமை. ஆனால் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதாகவே தேமுதிக தெரிவித்துள்ளது” என கூறியுள்ளார்.

தேர்தல் தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே பல்வேறு கருத்துகள் நிலவி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

32 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்; இந்திய நிலவரம்!