Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவில் சசிகலா... தகவலை கசிய விட்ட அமைச்சர்!

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (19:46 IST)
சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவாரா என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்துள்ளார். 
 
திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை. தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிரப்பிவிட்டனர். 
 
மக்களிடத்திலே எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால்தான் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது. இது அதிமுகவுக்கு கிடைத்த அங்கீகாரம்.
 
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நான் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இதன் மூலம் மக்களையும் மற்ற கட்சிகளையும் மிரட்டுகிறார். அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. அவரது கனவு பலிக்காது.
 
அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்ப்பது குறித்து முதல் அமைச்சர் துணை முதல் அமைச்சர் முடிவு செய்வார்கள். இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார். உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி நாயகன் எடப்பாடி பழனிசாமி செல்வாக்கு பிரதிபலிக்கும் என பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments