Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடனே மதுவை ஸ்டாப் பண்ணா நரம்பு தளர்ச்சி வரும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (11:45 IST)
தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் குறைந்தபட்சம் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைத்து கொண்டே வரவேண்டும் என்று அரசியல் கட்சிகளும் சமூக நல ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதற்கு காரணம் குடிமகன்களின் உடல்நலன் கருதியே என்ற வித்தியாசமான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'மதுவை தொடர்ந்து குடித்து வருபவர்கள் திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது என்றும், குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்றும் கூறியுள்ளார்.
 
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் கண்டங்களுடன் மீம்ஸ் போட்டும் கலாய்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments