Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முருகன், நளினிக்கு நீண்ட விடுப்பு அளிக்க முடியாது: அமைச்சர் ரகுபதி!

முருகன், நளினிக்கு நீண்ட விடுப்பு அளிக்க முடியாது: அமைச்சர் ரகுபதி!
, வியாழன், 22 ஜூலை 2021 (07:51 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன் நளினி ஆகியோருக்கு நீண்ட விடுப்பு அளிக்க தமிழக அரசால் முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார் 
 
நேற்று வேலூர் சிறையை பார்வையிட்ட அமைச்சர் ரகுபதி, முருகன் மற்றும் நளினியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது முருகன் மற்றும் நளினி ஆகிய இருவரும் தங்களுக்கு நீண்ட விடுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் 
 
இந்த கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி தமிழக அரசால் அதிகபட்சமாக 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும் என்றும் கூடுதலாக 30 நாட்கள் விடுப்பை நீட்டிக்க முடியும் என்றும் அதற்கு மேல் நீண்ட விடுப்பு வேண்டுமென்றால் நீங்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் கூறியுள்ளார் 
 
இதனை அடுத்து நீண்ட விடுப்பு கோரிக்கை கேட்டு விரைவில் நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தை அணுகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு சிறப்பு ஏற்பாடு: பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட மதுரை மாநகராட்சி உதவி ஆணையர்