பாலிடெக்னிக் சேர்க்கை இரு மடங்காக அதிகரிப்பு: அமைச்சர் பொன்முடி தகவல்..!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (13:43 IST)
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் பிளஸ் டூ முடித்துவிட்டு இன்ஜினியரிங் கல்லூரி படிப்புக்கு செல்வதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நான் பாலிடெக்னிக் சேர்க்க இருமடங்காக அதிகரித்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 
 
அதிமுக ஆட்சி இருந்த கடந்த 10 ஆண்டுகளில் பாலிடெக்னிக் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து இருந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை இருமடங்காக உயர்ந்து உள்ளது என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் நாள் முதல்வன், புதுமைப் பண்பு போன்ற திட்டங்களால் மாணவர் சேர்க்கை 1.20 லட்சம் உயர்ந்துள்ளது என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் ஆர்.என். ரவி போட்ட தரமான உத்தரவு.. பரபரப்பு தகவல்..!

நேபாளத்தில் பாரம்பரிய கட்சிகள் படுதோல்வி.. GenZ ஆதரவு பெற்ற பாடகர் கட்சி அபார வெற்றி..!

சென்னை எழும்பூர் பார்க்கிங் மூடப்படும்.. மாற்று ஏற்பாடு செய்து கொள்ள மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!

எங்களை விட தேமுதிகவுக்கு அதிகமா?!.. கோபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி!...

அடுத்த கட்டுரையில்
Show comments