Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் புதிதாக 31 அரசு கல்லூரிகள்: அமைச்சர் பொன்முடி தகவல்

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (18:27 IST)
தமிழகத்தில் புதிதாக 31 அரசு கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது புதிய கல்லூரிகள் தொடங்குவது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் 31 புதிய கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் குறிப்பாக எந்த பகுதியில் கல்லூரிகள் இல்லை என்பதை ஆய்வு செய்து அந்த பகுதியில் முதல் கட்டமாக கல்லூரி தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோல் 4,000 பேர் பேராசிரியர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்
 
கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதை அடுத்து 31 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments