Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாசிச கட்சிகளுக்கு எதிராக போராட்டம்: காங்கிரஸ் புதிய தலைவரின் முதல் பேச்சு!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (18:10 IST)
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே பாசிச சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று கூறியுள்ளார் 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜூன கார்கே தனக்கு ஓட்டுப் போட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் 
 
மேலும் வகுப்புவாத போர்வையில் ஜனநாயக மக்களை தாக்கும் பாசிச சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றும் கட்சியில் சிறியவர் பெரியவர் என அனைவரும் கட்சி தொண்டர்களை போல் நாம் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
என்னுடன் போட்டியிட்ட சசி தரூரை வாழ்த்த விரும்புகிறேன் என்றும் அவரை கட்சி சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் எனது வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் 
 
முன்னதாக காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜூனே கார்கேவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி ,பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments