Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாசிச கட்சிகளுக்கு எதிராக போராட்டம்: காங்கிரஸ் புதிய தலைவரின் முதல் பேச்சு!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (18:10 IST)
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே பாசிச சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று கூறியுள்ளார் 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜூன கார்கே தனக்கு ஓட்டுப் போட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் 
 
மேலும் வகுப்புவாத போர்வையில் ஜனநாயக மக்களை தாக்கும் பாசிச சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றும் கட்சியில் சிறியவர் பெரியவர் என அனைவரும் கட்சி தொண்டர்களை போல் நாம் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
என்னுடன் போட்டியிட்ட சசி தரூரை வாழ்த்த விரும்புகிறேன் என்றும் அவரை கட்சி சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் எனது வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் 
 
முன்னதாக காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜூனே கார்கேவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி ,பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments