Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராம சபை கூட்டத்தில் சுற்றிவளைத்த பொதுமக்கள்: வெளியேறிய அமைச்சர் பொன்முடி!

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (16:18 IST)
கிராம சபை கூட்டத்தில் சுற்றிவளைத்த பொதுமக்கள்: வெளியேறிய அமைச்சர் பொன்முடி!
கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை, கிராமத்தினர் சுற்றிவளைத்து கேள்விகளை கேட்ட நிலையில் அவர் அந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருகை தந்திருந்தார் 
 
அப்போது அவரிடம் கழிவுநீர் கால்வாய், குடிநீர் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த குறைகள் அனைத்தும் ஒரு சில நாட்களில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் உத்தரவாதம் அளித்தும் மக்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அவர் திடீரென வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மருத்துவமனைகளில் சிறுநீரக கடத்தல்.. திமுகவினருக்கு தொடர்பு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்.. விட மாட்டோம்.. தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை..!

புரளியால் பாதித்த தர்பூசணி வியாபாரம்! நஷ்டஈடு வழங்க வேண்டும்!? - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஒரு கோயிலுக்காக போரா? கம்போடியாவில் குண்டு மழை பொழியும் தாய்லாந்து! - என்ன காரணம்?

மாயமான ரஷ்ய விமானத்தின் பாகங்கள் சீனாவில் கண்டெடுப்பு! - என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments