Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராம சபை கூட்டத்தில் சுற்றிவளைத்த பொதுமக்கள்: வெளியேறிய அமைச்சர் பொன்முடி!

ponmudi
Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (16:18 IST)
கிராம சபை கூட்டத்தில் சுற்றிவளைத்த பொதுமக்கள்: வெளியேறிய அமைச்சர் பொன்முடி!
கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை, கிராமத்தினர் சுற்றிவளைத்து கேள்விகளை கேட்ட நிலையில் அவர் அந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருகை தந்திருந்தார் 
 
அப்போது அவரிடம் கழிவுநீர் கால்வாய், குடிநீர் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த குறைகள் அனைத்தும் ஒரு சில நாட்களில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் உத்தரவாதம் அளித்தும் மக்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அவர் திடீரென வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாநில சுயாட்சி உயர்நிலைக் குழு; அரசிடம் இதற்காக சம்பளம் வாங்க மாட்டேன்! - முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்!

போதைப்பொருள் கேப்சூலை விழுங்கி கடத்திய நபர்.. ‘அயன்’ பாணியில் ஒரு கடத்தல்..!

திருப்பதி கோவில் மீது ட்ரோன் பறக்கவிட்ட யூடியூபர்.. கைது செய்த போலீசார்..!

அரிவாள் வெட்டில் முடிந்த பென்சில் தகராறு! 8ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

அத்துமீறிய மாமியார் கொடுமை.. ஆள் வைத்து தாக்கிய மருமகள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments