Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரான பொன்முடி..!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (14:46 IST)
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜரானதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்ட விரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக நவம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இன்று அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

இன்று காலை ஆஜரான அவரிடம்  ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.  ஏற்கனவே பொன்முடி மற்றும் அவருக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் வெளிநாட்டு கரன்சி உள்பட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இந்த ஆவணங்கள் குறித்து இன்றைய விசாரணையில் அவரிடம் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இன்றைய விசாரணைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments