Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 500 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (17:33 IST)
தற்போது 300 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 
 
தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் சில்லறை விலையில் தக்காளி விலை 200 ரூபாயை நெருங்கி விட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள 300 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது கூடுதலாக 200 ரேஷன் கடைகளில் அதாவது மொத்தம் 500 ரேஷன் கடைகளில் நாளை முதல் 60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments