Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நாட்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை; அமைச்சர் பெரிய கருப்பன்

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (13:11 IST)
பத்து நாட்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையாக 130 ரூபாயும் சில்லறை விலையாக 150 ரூபாயாகவும் ஒரு கிலோ தக்காளி விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் தக்காளி விலை உயர்வு குறித்து அமைச்சர் பெரிய கருப்பன் கூறிய போது பசுமை பண்ணை கடைகளில் தக்காளி கொள்முதல் அதிகரித்துள்ளோம் என்றும் இன்னும் பத்து நாட்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்பதால் விவசாயிகளிடமிருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளோம் என்றும் தெரிவித்தார். 
 
அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments