Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நாட்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை; அமைச்சர் பெரிய கருப்பன்

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (13:11 IST)
பத்து நாட்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையாக 130 ரூபாயும் சில்லறை விலையாக 150 ரூபாயாகவும் ஒரு கிலோ தக்காளி விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் தக்காளி விலை உயர்வு குறித்து அமைச்சர் பெரிய கருப்பன் கூறிய போது பசுமை பண்ணை கடைகளில் தக்காளி கொள்முதல் அதிகரித்துள்ளோம் என்றும் இன்னும் பத்து நாட்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்பதால் விவசாயிகளிடமிருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளோம் என்றும் தெரிவித்தார். 
 
அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments