தண்டவாளத்தை ஒட்டி நின்று, செல்ஃபி: ரயில் மோதி இரு இளைஞர்கள் பரிதாப பலி..!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (13:01 IST)
திருப்பூர் அருகே தண்டவாளத்தை ஒட்டி செல்பி எடுத்து இரண்டு இளைஞர்கள் ரயில் மோதியதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருப்பூர் அருகே அணைப்பாளையம் என்ற பகுதியில் தண்டவாளத்தை ஒட்டி ரயில் வரும்போது 22 வயது பாண்டியன் மற்றும் 25 வயது விஜய் ஆகிய இருவரும் செல்பி எடுக்க முயன்றனர். 
 
அப்போது நெல்லையிலிருந்து பிளாஸ்பூர் சென்ற விரைவு ரயில் அவர்கள் இருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவதும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது இருவரும் ஈரோடு மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர்கள் என்றும் திருப்பூரில் வேலை செய்ய வந்த இடத்தில் தண்டவாளம் அருகே ஆக போது செல்பி எடுப்பார்கள் என்றும் அப்போது செல்பி எடுக்கும்போது தான் வெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. 
 
ரயில் வரும் பாதையில் செல்பி எடுக்கக் கூடாது என ஏற்கனவே ரயில்வே துறை பலமுறை எச்சரிக்கை செய்திருந்தும் இன்று இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments