Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரின் உதவியாளர் கத்தி முனையில் கடத்தல்! – திருப்பூரில் பரபரப்பு

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (13:44 IST)
தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளரை மர்ம கும்பல் கத்தி முனையில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Minister Udumalai Radhakrishnan

தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளராக பணியாற்றி வருபவர் கர்ணன். இன்று உடுமலைபேட்டை சட்டமன்ற கட்டிடத்தில் பணியில் இருந்த கர்ணனை, உள்ளே புகுந்த மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி வெளியே கொண்டு சென்றுள்ளனர். பிறகு அங்கு தயாராய் நின்ற தங்கள் வாகனத்தில் அவரை கடத்திக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்ணனை மர்ம கும்பல் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கர்ணன் கடத்தப்பட்ட விவகாரம் தனிநபர் பிரச்சினையாக இருக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments